சென்னை: பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சாலைகளில் தேவையின்றி வலம் வந்தவர்களை காவல்துறையினர் கையாண்ட விதம் உன்னதமானது. கிராமப்புறங்களிலும் இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனவே, காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்க வேண்டும்.