×

சென்னையில் தடை உத்தரவை மீறிய 283 பேர் மீது வழக்கு: 119 பைக் பறிமுதல்

சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி  மாலை 6 மணி வரையில் சென்னையில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் திரிந்த 279 பேர் மீது  வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய 3 பேர் மீதும், வதந்தி பரப்பிய ஒருவர் என்று மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 119 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக  4 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகளும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக  547 வழக்குகளும் என மொத்தம் 1,400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 இலகு ரக வாகனங்கள், 580 இருசக்கர வாகனங்கள், 73 ஆட்டோக்கள் மற்றும் 7 இதர வாகனங்கள் என மொத்தம் 670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : persons ,Chennai , 283 persons , violating prohibition ,Chennai
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது