திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழா, திருக்கல்யான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் 15 நாட்கள் நடைபெறும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோயில் துணை ஆணையர் ராமசாமி அறிவித்தார்.