டெல்லி: ஊரடங்கால் நாட்டில் வேலை இழந்துள்ள தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய முழுவதும் பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விடுத்தார். இதனால் பல லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இன்றி திண்டாடி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.