×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தோழியின் தந்தைக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் நிஷா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 5ம் வகுப்பு படிக்கிறாள்.  கடந்த 2016ம் ஆண்டு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, நிஷா தனது அம்மா வீட்டிற்கு வெளியே சென்றதால், சிறுமி எதிர் வீட்டில் இருக்கும் தோழியை பார்க்க சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தோழியின் தந்தை அன்வர்பாஷா (50) இருந்துள்ளார். அவர் சிறுமியை அழைத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அன்வர்பாஷாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அன்வர் பாஷா போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தது, சாட்சிகள் மற்றும் ஆவணங்களை வைத்து நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : 10-year jail sentence for girlfriend of girlfriend
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...