சென்னை: நேற்று பிளஸ்-2 தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. கொரோனா பயம் காரணமாக, கடைசி தேர்வில் மாணவர்கள் பங்கேற்கவில்லை ஏன்னு கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.