டெல்லி: அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க ஆணையிடப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகளை திறக்க வேண்டும் என உள்துறை தெரிவித்துள்ளது.