சென்னை: 144 தடை உத்தரவு எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகிகளுக்கு முறையான அறிவுரைகளையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கி வருகிறார்.