×

பாதாள சாக்கடை அடைப்பால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம்

பெரம்பூர்:  புளியந்தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், தொற்றுநோய் பீதியில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.  சென்னை திருவிக நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு ராமசாமி தெரு பகுதியில் உள்ளே பாடிசன்புரம் சந்து பகுதியில் இங்குள்ள மென்ஹோலில் இருந்து சுமார் ஓரு மாத்திற்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியாக செல்பவர்கள் கழிவுநீரில் கால் வைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த மென்ஹோலில்  இருந்து கழிவுநீர் வெளியேறி அடிக்கடி குளம்போல தேங்கி நிற்கிறது.

பலமுறை இதுகுறித்து குடிநீர்  மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், அப்போது வந்து லாரிகளில் மேலே உள்ள கழிவு நீரை மட்டும் உறிஞ்சி எடுத்து விட்டு செல்கின்றனர். மீண்டும் இரண்டு தினங்களில் கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் தினந்தோறும் காலையில் வேலைக்கு செல்லும் போதும் வெளியே சொல்லும் போதும் கழிவுநீரில் கால் வைத்து வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதில், கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக அதிகாரிகள் இந்த பகுதியில் கழிவுநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Sewage,Storm,Dumping Sewers
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...