சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்க என பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இழப்பீடு தொகையை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்த வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.