டெல்லி:ஈரானில் உள்ள 600 இந்தியர்களை மீட்டு வர விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மார்ச் 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஈரானில் இருந்து சுமார் 600 இந்தியர்களை அழைத்து வர ஈரானிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ்க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த இந்தியர்கள் அனைவரும் கொரோனா வைரஸுக்கு பாதிப்பு இல்லை என உறுதி படுத்தப்பட்டுள்ளனர்.