ஈரோடு: தாய்லாந்தில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணத்தை கொண்டும் வெளியே வர கூடாது என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெருந்துறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை முடக்குவது பற்றி தமிழக அரசிடம் இருந்து உத்தரவு ஏதும் வரவில்லை என ஆட்சியர் கூறியுள்ளார்.