×

கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை என்று தெரிவித்தார். மேலும், அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்கனவே ரூ.60 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Tags : government ,Palanisamy ,CM Palanisamy Corona , Corona, sign, action, chief Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...