×

மக்களுக்கு பிரதமர் நன்றி

புதுடெல்லி: கொரோனா வைரசை எதிர்த்து போராடுபவர்களுக்கு நன்றி தெரிவித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாட்டு மக்களுக்கு கடந்த 19ம் தேதி உரையாற்றிய மோடி, நேற்று சுய ஊரடங்கை கடைபிடிக்கவும், கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியில் இருப்பவர்களுக்கு நேற்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியே 5 நிமிடம் கூடி நின்று கைதட்டி, மணியடித்து மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி. நாட்டு மக்கள் பலர் வீட்டு வாசலில், பால்கனியின் நின்று கைதட்டி, மணியடித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். தனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து நன்றி தெரிவித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : PM thanks , people
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...