திருமலை பக்தர்கள் இல்லாமல் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை தவிர மற்ற அனைத்து ஊழியர்களும் அவரவர் வீடுகளிலேயே தஞ்சமடைந்தனர். இதேபோன்று திருமலையில் பாலாஜி நகரிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. மேலும், ஏழுமலையானுக்கு நடைபெறக்கூடிய அனைத்து பூஜைகளும் ஏகாந்தமாக அர்ச்சகர்கள் நடத்தி வருகின்றனர். திருமலை வரலாற்றில் இதுபோன்று எப்போதும் நாங்கள் பார்த்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருமலையில் ஆட்டோபஸ் கமாண்டோ படையினர் ஏழுமலையான் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.