×

துபாயில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா: கர்நாடகா அமைச்சர் தகவல்

பெங்களூரு: துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட 195 பேரில் 6 பேருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஸ்ரீராமுலு  தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: துபாயில் தவித்து வந்த  கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 195 பேரை பெங்களுரு அழைத்து வரப்பட்டனர்.  விமான  நிலையத்தில் இவர்களை சோதனை செய்த போது 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களை ராஜீவ்காந்தி நெஞ்சக  மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில்  சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில  மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். அதே போல் வைரஸ் பாதிப்பு  அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்  என்றார்.  இதனால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karnataka ,Dubai Corona , Corona
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...