×

5 பேருக்கு மேல் கூடக்கூடாது: புதுச்சேரியில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்றிவு முதல் வரும் 31ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மையை கொண்டிருக்கிறது. எனவே 1973ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி தெருக்கள், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. இந்த நடைமுறை நேற்று இரவு 9 மணி முதல் வரும் 31ம் தேதிவரை கடைபிடிக்கப்படும். அதே நேரத்தில் முக்கியமான ஏஜென்சிகள், சட்டம்- ஒழுங்கை காக்கும் பணியில் இருக்கும் அதிகாரிகள், அத்தியாவசிய பணியான கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,Puducherry ,Corona , Corona
× RELATED சிறுமியை கொடூரமாக கொன்றது எப்படி? தத்ரூபமாக நடித்து காட்டிய ெகாலையாளிகள்