×

பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கொரோனா தீவிரம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் 144 உத்தரவை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடக்க வேண்டிய மீதம் உள்ள தேர்வுகளை ஒத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும். மேலும் 31ம் தேதி வரை தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை மூடவும் உத்தரவிட வேண்டும். அதேபோல ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : election , Plus 2 general election, postponement, teachers union, request
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...