×

போட்டிகள் எதுவும் இல்லாததால் மாயாஜாலம் காட்டும் ஸ்ரேயாஸ்: கொரோனா பீதிக்கிடையே மகிழ்ச்சி

மும்பை: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தெடர், ஐபிஎல் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திரமாக சமீபகாலமாக திகழ்ந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயர், கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே இருக்கும் வீரர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் சில மாயாஜால வித்தைகளைப் கற்றுவருகிறார். இவர், வித்தைகளை கற்கும் வீடியோ பதிவை பிசிசிஐக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் வீடியோ பதிவில், ஸ்ரேயாஸ் ஐயர் தனது தங்கை நடாஷாவுடன் இணைந்து, சீட்டுக்கட்டுகளை வைத்து மாயாஜாலம் செய்வது போன்ற காணொலியைப் பகிர்ந்துள்ளது.

மேலும், பிசிசிஐ வெளியிட்ட பதிவில், ‘எல்லோரும் வீட்டிற்குள் இருக்கும்போது எங்களை மகிழ்விக்க எங்கள் மாயாஜால வித்தை செய்யும் ஸ்ரேயாஸ் ஐயரை நம்புங்கள். புன்னகை வீரரைக் கொண்டுவந்ததற்கு நன்றி’ என்றும் தெரிவித்துள்ளது. இந்தக் காணொலி தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தில் பரவிவருகிறது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, இன்று (மார்ச் 22) ‘மக்கள் ஊரடங்கு உத்தரவு’ என்ற பெயரில் மக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என வலியுறுத்தியதன் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு தங்களது ரசிகர்களிடம் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,matches , Competition, magic, Sreyas, corona panic
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...