மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றாக மது அருந்திய அண்ணன், தம்பி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிவக்குமார், வினோத் இருவரும் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இருவரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.