சென்னை: இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் வீடுகளில் தொழுதுகொள்ள ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. மசூதிகளில் ஊழியர்கள் மட்டும் பாங்கு சொல்லி தொழுதுகொள்ளவும் ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள சுய ஊரடங்கை கடைபிடிக்க மசூதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.