திருச்சி: சுயஊரடங்கு அமலானதை அடுத்து திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடியது. சுய ஊரடங்கை ஒட்டி பழனியில் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பழனி மலை அடிவார கடைகளும் அடைக்கப்ட்டன. சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் இன்று 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.