×

அதென்ன கொரோனா?

Corona virus disease 19 என்பதன் சுருக்கமே covid 19 (கோவிட்-19). கடந்த ஆண்டு (2019) டிசம்பரில் பரவியதால் இந்த பெயரை பெற்றது. கொரோனா வைரஸ் குடும்பம் கொஞ்சம் பெரியது. அந்த குடும்பத்தில் இருந்து உருவான MARS (Middle east respiratory syndrome), SARS (severe acute respiratory syndrome) ஆகிய இரண்டும் ஏற்கனவே நம்மை அச்சுறுத்தி விட்டு, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி அடங்கியவைதான். இவை இரண்டையும் விட தற்போது வந்துள்ள கொரோனா, அதிக வீரியமுள்ள வைரஸாக உலகை ஆட்கொண்டு வருகிறது.  சாதாரண வைரஸ் தொற்றில் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளே இதிலும் தென்படும். பின்னர் வறட்டு இருமல், வயிற்று வலி, மூச்சுத்திணறல் சேர்ந்து கண்டு, நுரையீரலை பாதிக்கச் செய்யும். 50 வயக்கு மேற்பட்டவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், படுத்த படுக்கையாக கிடக்கும் நோயாளிகள், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் கவனமுடன் இருக்க வேண்டும். நோயின் தாக்கம் 2 முதல் 14 நாள்கள் இருக்கும் என்பதால் அந்த நாள்களுக்கு வீட்டினை விட்டு வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கலாமா?
பொதுவாக, வெயில் காலங்களில் எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுவது சிறந்தது என்பார்கள். வைட்டமின் ‘சி’ உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக இந்த ஜூஸ் உள்ளது. எனவே, அன்றாடம் குடும்பசகிதம் நாட்டுச்சர்க்கரை அல்லது ஜீனி, உப்பை சம விகிதத்தில் கலந்து பருகலாம். அது மட்டுமல்ல... தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும். கிவி பழத்தையும் சாப்பிடலாம். இத்துடன் வைட்டமின் ‘ஏ’, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் போன்றவைகளும் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடியிலும் ஜூஸ் செய்தோ அல்லது அப்படியோ சாப்பிடலாம். இவைகள் கலோரி குறைந்த கொழுப்பில்லாத பழங்களாகும். அன்னாசி பழத்தில்  வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. காய்கறிகளை பொறுத்தவரை ப்ராக்கோலி, காலிபிளவரை எடுத்துக் கொள்ளலாம்.

எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள்

கருஞ்சீரகம்
பப்பாளி
கேரட்
இஞ்சி சட்னி
பூண்டு சட்னி
மூன்று பூண்டுகளை நசுக்கி பாலில் கலந்து சாப்பிட வேண்டும்
அன்னாசிப் பூ (நட்சத்திர சோம்பு)
தற்போதைய சீசனில் கிடைக்கும் காய், பழங்கள்
இறைச்சி வீட்டில் சமைத்து சாப்பிடலாம்
தேன்
உணவில் தேங்காய் எண்ணெய்
ஏலக்காய்
பனை வெல்லம்
கருப்பு திராட்சை
ஸ்ட்ராபெர்ரி
நெல்லிக்காய்
கொய்யாப்பழம்
ஆரஞ்சு
குடை மிளகாய்
சர்க்கரைவள்ளி கிழக்கு
முருங்கைகீரை சூப்பு
தக்காளி ரசம்
மிளகு ரசம்
துளசி இலைகள்

கூட்டம் தருதே வாட்டம்...
ஒன்றிரண்டு வாரங்கள் பொதுக்கூட்டங்கள், கல்யாணம், குடும்ப விழாக்களை தவிர்க்கலாம். உறவினர்கள் அழைத்தாலும் நாசூக்காக கூறி தவிர்க்கலாம். வெளியூரில் பங்கெடுக்க வேண்டிய அலுவலக நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம். நண்பர்கள் என்றாலும் கூட கூட்டமாக நின்று பேசுவதை தவிர்க்கலாம். குறிப்பாக, இருமல், சளி தொந்தரவு உள்ளவர்களிடம் இருந்து விலகி நிற்பதே சிறந்தது. நமது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

வெயிலில் நின்றால் கொரோனா வராதா?
சீனாவில் பனித்தாக்கம் அதிகமாக இருந்ததால்தான், அங்கு கொரோனாவால் அதிக பேர் பாதிக்கப்பட்டனர். அதேநேரம் 27 டிகிரி வெயிலில் கொரோனா பரவாது என்ற வாதம் கடந்த சில வாரங்களாக அடிபடுகிறது. கடந்த 19ம் தேதி மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினிகுமார் சவுபே அளித்த பேட்டி ஒன்றில், ‘‘காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை சூரிய ஒளி நன்கு காயும். இந்த நேரத்தில் நாம் சூரிய ஒளி படும்படி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் இருந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வைட்டமின் ‘டி’ கிடைக்கும். மேலும், கொரோனா போன்ற வைரஸ்கள் வெயிலில் அழியும்’’ எனக்கூறி இருந்தார். இது தவறான கருத்து என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, கடும் வெயிலில் பரவுவது மிகக்குறைந்தளவு கட்டுப்படுத்தலாமே தவிர, பரவுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்கின்றனர். எனவே, வெயிலில் நின்றால் நல்லது என்று சிலர் சிறுவர்களை வெயிலில் விளையாட வருகின்றனர். இது தவறானது என்பதை பெற்ேறார் உணர வேண்டும் என கூறுகின்றனர்.

Tags : Corona , Corona, Tamil Nadu, Rs 987 crore
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...