×

ஊத்துக்கோட்டை பணிமனையில் 25 பேருந்துகள் சேவை நிறுத்தம்

ஊத்துக்கோட்டை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊத்துக்கோட்டை பணிமனையில் இருந்து வெளியூர் செல்லும் 25 பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. ஊத்துக்கோட்டை பேருந்து பணிமனையில் இருந்து கடலூர், திருச்சி, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, ஆந்திரா மாநிலம் நெல்லூர், புத்தூர், திருப்பதி மற்றும் சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு 37 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 12 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு மீதம் உள்ள 25 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிரைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ஊத்துக்கோட்டையில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்று வர ரூ.10 ஆயிரம் ஆன கலெக்சன் தற்போது வெறும் ரூ.2 ஆயிரம் தான் வந்தது. இதேப்போல் பல பகுதிகளுக்கு சென்று வர குறைந்தளவு வருமானமே வருகிறது. மேலும், பஸ்களில் பயணிகள் பயணம் செய்வது குறைந்து விட்டது. இதனால் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Udukottai workshop , Pudukkottai, Workshop, Buses, Parking
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை