×

பெட்ரோல் பங்க் இன்று திறந்திருக்கும்

சென்னை: இந்தியன் ஆயில் தெற்கு மண்டல பொதுமேலாளர் சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுத்துறை நிறுவன எண்ணை விற்பனை நிறுவனங்களான இந்தியன்ஆயில், பிபிசிஎல் மற்றும் எஸ்பிசிஎல் ஆகியவற்றின் பெட்ரோல் பங்குகள் இன்று  (22ம் தேதி) ஊரடங்கு நடக்கும் நேரமான காலை 7 மணி முதல் 9 மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திறந்திருக்கும்.

இது குறைவான பணியாளர்கள் மற்றும் குறைவான எரிபொருளோடு அவசரநிலைகள் மற்றும் அவசரநிலைகளில் தவிர்க்க முடியாத மற்றும் அத்தியாவசிய  போக்குவரத்தை மட்டுமே ஆதரிக்கும் வகையில் செயல்படும். சம்மந்தப்பட்ட நேரத்தில் சாதாரணமாக எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும். காலை  7 மணிக்கு முன்பும், இரவு 9 மணிக்கு பிறகும் பங்குகளில் சாதாரண சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Petrol Punk is open today
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...