×

தஞ்சை அருகே கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே கலெக்டர் வீட்டில் 20 லட்சம் மதிப்புள்ள 55 பவுன் நகை மற்றும் சிசிடிவி கேமராவை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள நாடியத்தை சேர்ந்தவர்  அன்புச்செல்வன். இவர் கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் குடும்பத்தோடு அங்கு தங்கி உள்ளார். நாட்டியத்தில் உள்ள வீட்டின் காவலுக்காக அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவர் அங்கே தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம் வீட்டின் முன்பக்கம் படுத்திருந்தபோது யாரோ சில மர்ம நபர்கள் பின்பக்க காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து, கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா, சிசிடிவி கருவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் சிசிடிவி கருவி மற்றும் கேமராக்களை வீட்டின் பின்பக்கம் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். நேற்று காலை செல்வம் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து கலெக்டர் அன்புசெல்வனுக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி சுப்ரமணியன், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : house ,collector ,mystery men ,Tanjore ,jewelry robbery , Asylum, Collector, Jewelry, Loot
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்