×

வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்: விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாளை அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு வீடியோ கால் மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.67 பேரின் ரத்த மாதிரிகள் குறித்து ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. கொரோனா பாதிப்பை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு நாளை நடந்தாலும் அரசு மருத்துவமனைகள் நாளை செயல்படும். 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayapaskar
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...