புதுடெல்லி: பொதுமக்கள் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பீதியடைய வேண்டாம், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். ஒவ்வொருவரின் சிறிய பங்களிப்பு, பெரிய நன்மைக்கு வழிவகுக்கும். அவரவர் இருக்கும் நகரத்தில் வீட்டிலேயே இருங்கள், என வேண்டுகோள் விடுத்துள்ளார்.