×

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கோவில் பணியில் இருந்து அவர் தற்காலிகமாக விடுவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் சுந்தர் ராஜாசாரிக்கு காய்ச்சல், சளி, ஜுரம் இருந்ததால் அவர், கோவில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக ஓய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சுந்தர் ராஜாச்சாரிக்கு திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அவரை உடனடியாக தேவஸ்தான பணியிலிருந்து விடுவித்து தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Tirupathi Ezhumaliyan Temple , Tirupati, Ezhumaliyan Temple, Archakar, Fever, Devasthanam
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற...