×

கூட்டப்புளி மீனவர் வலையில் 1.5டன் ராட்சத சுறா சிக்கியது

பணகுடி : கூட்டப்புளி மீனவர் வலையில் 1.5டன் ராட்சத சுறா சிக்கியது.  நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கடற்கரையோர கிராமமான கூட்டப்புளியை சேர்ந்தவர் வில்சன். இவரது படகில் வில்சன் உள்பட 4 பேர் நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அவரது வலையில் பெரிய எடையிலான மீன் சிக்கியது. வலையை இழுக்க முடியாததால், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் உதவியுடன் வலையை கரைக்கு இழுத்து வந்தனர்.

கரையில் வந்து பார்த்த போது  சுமார் 1.5 டன் எடையும், 5 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய புள்ளி சுறா வலையில் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து வலையில் சுறா சிக்கியது பற்றி கேட்டறிந்தனர். இரை தேடி வரும்போது வலையில் சிக்கியிருக்கலாம் என மீனவர்கள், அவர்களிடம் தெரிவித்தனர். மருத்துவ குணமிக்க இந்த சுறாவை வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்து சென்றார்.

Tags : fisherman , gigantic shark ,fisherman's net,panakudi
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...