×

சென்னை மதுரவாயல் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: கொடூர இளைஞர் கைது!

சென்னை: சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தூக்கி வீசிய இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மேட்டுக்குப்பம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு 11 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அச்சமயம் அப்பகுதியில் வசிக்கக்கூடிய சுரேஷ் என்ற வாலிபர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் உடலை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார். தொடர்ந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்குள் வராததால் அவரது பெற்றோர் சந்தேகமடைந்து தேடியுள்ளனர். அக்கம் பக்கத்தில் விசாரித்தும் மகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்றதும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் ரோந்து பணியில் இருந்த போலீசார் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் சிறுமி கீழே விழுந்து மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அச்சுறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து  சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்றிரவு சிறுநீர் கழிப்பதாக வெளியே வந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வாலிபர் பலாத்காரம் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷை கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Madurai , Chennai, Tamil Nadu, minor, rape, murder, youth arrested
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...