புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 219 இந்தியர்கள், 39 வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52, கேரளாவில் 40, உத்தரபிரதேசகத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 23 பேர் மீண்டுள்ளதாகவும், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.