×

மதுரவாயல் அருகே காரில் வந்து வழிப்பறி: கும்பலுக்கு வலை

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே காரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.  சென்னை மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், சக்தி நகர், 18வது தெருவை சேர்ந்தவர் நேதாஜி (24), சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ். படித்து வருகிறார். நேற்று பிற்பகல் மதுரவாயலில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.  மதுரவாயல், கார்த்திகேயன் நகர் அருகே நடந்து சென்றபோது காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் நேதாஜியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1.5 சவரன் நகை மற்றும் 500 பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.  இது குறித்து நேதாஜி மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததையடுத்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். „ புளியந்தோப்பு வஉசி நகர் 2வது தெருவை சேர்ந்த பொம்மி (40) என்பவரை முன்விரோத தகராறில் வீடு புகுந்த தாக்கிய உறவினர்கள் அர்ஜூன் (28), பிரசாந்த் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

„திருவல்லிக்கேணி இருசப்பன் தெருவை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தங்கராஜ் (42), நேற்று முன்தினம் நெற்குன்றம் மாதாகோயில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, வயர்களை பழுதுபார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு இறந்தார்.  „ பீர்க்கன்காரணை சூரத்தம்மன் கோயில் 2வது தெருவை சேர்ந்த பூமி பாலன் (25) என்பவர் திருமணமாகாத விரக்தியில் அதேபகுதி ஏரிக்கரை காமராஜர் சாலையில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். „ வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த பேசின்பிரிட்ஜ் காந்திநகர் 8வது தெருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் கார்த்திகேயன் (32) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.  „ கிண்டி ரயில் நிலையம் அருகே நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர், மின்சார ரயில் மோதி இறந்தார்.  „ வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை ஜே- பிளாக் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Tags : gate ,Madurai ,gang , Maduravoyal, robbery
× RELATED சாலையில் கிடக்கும் மரத்துண்டுகள்