×

கலைஞர், முரசொலி மாறன் பூங்காவை சீர்படுத்துங்கள்: தாயகம்கவி கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) பேசியதாவது: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில், குடிநீரோடு, கழிவுநீர் கலப்பதென்பது கடந்த 6 மாத காலமாக பெரும் பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கிறது. எனவே, எனது தொகுதியில் இருக்கிற பழைய குடிநீர்க் குழாய்களையும் அதேபோல கழிவுநீர் கால்வாய்களையும் அகற்றிவிட்டு, புதிதாக அமைத்துத்தர வேண்டுகிறேன்.  வார்டு எண் 74ல் அமைந்திருக்கிற மூலிகை பூங்கா, வார்டு எண் 70ல் அமைந்திருக்கிற முரசொலிமாறன் பூங்கா, வார்டு எண் 76ல் அமைந்திருக்கிற கலைஞர் பூங்கா இவையெல்லாம் பராமரிப்பின்றி, சிதிலமடைந்திருக்கிற சூழ்நிலையில் இருக்கிறது. அவற்றையும் சீர்படுத்தித் தர வேண்டுகிறேன்.  

அதேபோல வார்டு எண் 72ல் கால்பந்தாட்ட வீரர்கள் நிறைந்திருக்கிற பகுதியான கன்னிகாபுரத்தில் இருக்கிற விளையாட்டு திடலை அந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு உதவுகிற வகையில், பயனளிக்கக்கூடிய வகையில் அந்த விளையாட்டு திடலையும் மேம்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். வார்டு எண் 72ல் இருக்கிற கன்னிகாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், வார்டு எண் 73ல் அமைந்திருக்கிற பகுதியை சுற்றியிருக்கிற பொதுமக்களுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடிய சிமென்ட் சாலைகளை அகற்றிவிட்டு, தார்ச்சாலை அமைத்துத்தர  வேண்டும் என்றார்.


Tags : Artist ,park ,Murasoli Maran ,Motherland ,Murasoli Maran Park , Artist, Murasoli Maran, Park, Homeland poet
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்