×

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் உதவித்தொகை தமிழகத்தில் புதிதாக 14 இடங்களில் நீதிமன்றம்

சட்டப்பேரவையில் நீதி நிர்வாகம் மற்றும் சிறைச்சாலைகள் மானியக்கோரிக்கையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
* தமிழகத்தில் உள்ள 260 நீதிமன்ற வளாகங்களில் (தலா இரண்டு வீதம்) மின்னணு பெயர் பலகைகள் மற்றும் இதர உபகரணங்கள் 10.26 கோடியில் வாங்கி நிறுவப்படும்.
* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தர்மபுரி மாவட்டம் அரூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் குளித்தலை ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.
* திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் கோவையில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய பழமை வாய்ந்த கட்டிடங்கள் 10 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரையில் உள்ள நீதிபதிகளின் பயன்பாட்டிற்காக உறையுடன் கூடிய 60 ஆப்பிள் ஐபாட்கள் 80.93 லட்சம் செலவில் வாங்கப்படும்.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்படக்கூடிய சாட்சி மற்றும் சிறுவர்கள் சாட்சி ஆகியோரை விசாரிக்கும் மையம் மற்றும் நீதிமன்ற அறைகள் 2.88 கோடி செலவில் கட்டப்படும்.
* விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ₹8.60 கோடியில் கட்டப்படும்.
* தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, கடலூர் மாவட்டம் முஷ்ணம், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய 5 இடங்களில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
* வழக்கறிஞர் எழுத்தர்களின் சேமநல நிதியினை 2 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை மாதம் 3 ஆயிரம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். தொடர்ந்து, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதில் அளித்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Tags : Attorneys Court ,places ,lawyers ,courts ,Tamil Nadu ,Young , 2 thousand ,scholarships , Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...