×

பிரதமர் மோடி அறிவிப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:பிரதமர் மோடி இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வுக்காக 22ம் தேதி (நாளை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பாக இதை வரவேற்கிறோம்.
மக்கள் விழிப்புணர்வு பெற்று கொரோனா கொடிய நோயால் யாரும் பாதிப்படையாமல், முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரோனாவை ஒழிப்போம், மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Vijayakanth ,Modi ,announcement , PM Modi, announcement, Vijayakanth
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...