திருச்சி: திருச்சியில் தவிக்கும் வெளிநாட்டு பயணிகள் 400 பேர் தாயகம் திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று திருச்சி சிவா எம்.பி.யிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். திருச்சியில் 400 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பது பற்றி திருச்சி சிவாவிடம் முறையீடு செய்யப்பட்டது. 400 பேர் திருச்சியில் தவிப்பது பற்றி அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்துக்கு கொண்டு சென்றார் திருச்சி சிவா.