சென்னை: நாளை முதல் மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வர மாநில அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி, மருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.