×

கொரோனாவை தடுக்க மக்கள் நாளை மறுநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோரிக்கை

டெல்லி: கொரோனாவை தடுக்க மக்கள் நாளை மறுநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சுய ஊலடங்கு குறித்து பிரதமர் விடுத்த அழைப்பை செயல்படுத்த மக்களுக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என கூறினார். முதியவர்களும், குழந்தைகளும் அடுத்த சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அளுநர் வலியுறுத்தியார். மேலும் பொதுமக்கள் அதிகம் கூட்டமாக செல்வதை தவிர்கக வேண்டும் எனவும் கூறினார். மார்ச் 22-ம் தேதி பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் போதிய ஒத்துழைப்பை தர வேண்டும் என கூறினார். விடுமுறை விடப்பட்டுள்ளதால் பிள்ளைகளை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Governor , People , practice,self-curfew,tomorrow,coronation,Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...