போபால் : மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநரிடம் நேரில் சென்று அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல்நாத் ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் நேரில் சென்று அளித்துள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த இரண்டு வாரங்களாக மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை” என்று தெரிவித்தார்.