×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு 900 கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் வருகை

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு 900 கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் வந்தடைந்தது. ேமலும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்காக  புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வந்தது.

கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஒன்று கூடும் மக்கள் குறைதீர்வு கூட்டம் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தினமும் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அதிகாரிகள் மனுக்களை பெற முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு மனுக்களை அளிக்க
வரும் பொதுமக்களுக்காக நுழைவாயிலில் பெரிய பெட்டி நேற்று வைக்கப்பட்டது.

குறைகள், கோரிக்கை மனுக்களை கொண்டு வரும் பொதுமக்கள் இந்த பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு பீடாரி பகுதியில் இருந்து 900 கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் 2 லாரிகளில் நேற்று இரவு வேலூர் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த இயந்திரங்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : district ,Vellore , Visit the integrated Vellore district with 900 antiseptic spray machines
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...