புதுச்சேரி: இது கொரோனா அல்ல- இது கர்மா என புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
மக்கள் இதிலிருந்து காத்துக்கொள்ள வழி தேடி வருகின்றனர். இச்சூழலில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று கரோனா பற்றி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், கூண்டில் மனிதர்கள் முககவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன் கீழே இது ெகாரோனா அல்ல.
இது கர்மா என்ற வாசகத்தை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளில், நாம் யாரை உட்கொள்கிறோம் என்ற பொறுப்பை எவ்வாறு ஏற்பது, இது பாதிப்பில்லா தேர்வை பற்றியதுதான். அத்துடன் அகிம்சையை பயிற்சி செய்வது வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும், உணவிலும்தான் என்று குறிப்பிட்டுள்ளார். கிரண்பேடியின் இந்த வலைபதிவு சமூக தளங்களில் வேகமாக பரவி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.