×

திருவனந்தபுரம் வந்த விமானத்தில் கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த 7 தமிழர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில்  இதுவரை கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர்  சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருவனந்தபுரம் டாக்டர் உள்பட 24 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  கடந்த 2ம் தேதி கத்தார் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஒருவருக்கு  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த  பயணிகள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன் கூறியது: கடந்த  மார்ச் 2ம் தேதி தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில்  திருவனந்தபுரம் வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த  விமானத்தில் வந்த பயணிகள் விவரம் சேகரிக்கப்பட்டது. இவர்களுடன் தமிழகத்தை  சேர்ந்த 7 பேர் பயணம் செய்தது தெரியவந்தது. அவர்களின் பெயர் பட்டியல் தமிழக அரசுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திய நடிகை: மலையாள  சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மம்தாமோகன்தாஸ். இவர் தமிழில்  சிவப்பதிகாரம் என்ற படத்தில் விஷாலுடன் நடித்தார். இவர் அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் இரவு  கொச்சி திரும்பினார். அங்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Tags : Tamils ,Corona ,flight ,victim ,Thiruvananthapuram , Thiruvananthapuram, Corona, Travel, 7 Tamils
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு