×

அரசு உத்தரவை மீறி செயல்பட்ட போரூர் ஐடி கம்பெனிக்கு சீல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் மையங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, பல சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில சாப்ட்வேர் நிறுவனங்களில், ஊழியர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் போரூர் அடுத்த முகலிவாக்கம், மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டல சுகாதார துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்ததால், அவர்களை வெளியேற்றி வீட்டில் இருந்து பணிபுரியும்படி சாப்ட்வேர்  நிர்வாகத்திற்கு சுகாதார துணை அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், சாப்ட்வேர் நிறுவனங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிடவில்லை என சாப்ட்வேர் நிறுவன நிர்வாகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூடுதல் மாநகர நல அலுவலர் மாகாலட்சுமி மற்றும் மண்டல நல அலுவலர் ராஜா ஆகியார் தலைமையில், சாப்ட்வேர் நிறுவனத்தின் நுழைவாயிலின் இரும்பு கதவுகளை மூடி சீல் வைத்தனர். பின்னர் குறைந்த ஆட்களை வைத்து பணிபுரிவதாக சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சீல் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Porur IT Company ,Government ,Corona ,Seal ,Porur , Corona, Government, Porur, IT Company, Seal
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...