×

தானே கத்தியால் கீறிக்கொண்டு அரிவாள் வெட்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

அவினாசி: திருப்பூர் மாவட்டம் அவினாசி பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பகவான் நந்து என்கிற நந்தகோபால் (50). இந்து மக்கள் கட்சி பிரமுகர். கடந்த 17ம் தேதி இரவு இவரை மாற்று மதத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தியதாகவும், அரிவாளால் வெட்டியதாகவும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பெருமாநல்லூர் போலீசார் நந்தகோபாலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி சந்தேகப்பட்ட போலீசார் நந்தகோபாலின் கார் டிரைவர் ருத்ரமூர்த்தியிடம் (20) விசாரித்தனர்.

அப்போது அவர், ‘‘நந்தகோபால், இந்து மக்கள் கட்சியில் உயர் பதவி வாங்கி, பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக அரிவாள் வெட்டு நாடகத்தை நடத்தினார். இதற்கு என்னை உதவிக்கு அழைத்தார். அவரது முதுகில் கத்தியால் சிறிய அளவில் கோடு போடும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதன்படி நான் செய்தேன். பிறகு அவர், தனக்குத்தானே கத்தியால் இரு கைகளிலும் லேசாக கீறிக்கொண்டார்’’ என்று கூறினார். இதை, திருப்பூர் வடக்கு தாசில்தார் பதிவு செய்தார். இதன் அடிப்படையில் நாடகத்துக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ருத்ரமூர்த்தியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


Tags : People's Party ,Hindu People's Party , Scream, scythe cut, Hindu People's Party, arrested
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை...