டெல்லி: மருத்துவமனை, விமான நிலையங்களில் பணியாற்றுவோருக்கு நாடு கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவசிய பணிகள் மற்றும் மருத்துவ சேவைகள் மீதான சுமை வரும் காலங்களில் அதிகரிக்கும். வரும் நாட்களில் சாதாரண பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம். தற்போதைய நெருக்கடியை உறுதியுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.