×

ஆட்டம் காணும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.30,032-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.30,032-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,879க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.38.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியது. இதனிடையே, கடந்த சில தினங்களாக எப்படி ஏறுமுகமாக இருந்து வந்ததோ, அதேபோல இறங்கு முகமாகவும் காணப்பட்டது. தொடர்ந்து உச்சத்திலேயே இருந்த தங்கத்தின் விலை கடந்த 11-ம் தேதி சற்று குறைய தொடங்கியது.

ஆனால் 13-ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,096 குறைந்து ரூ.32,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்தநாள் சவரனுக்கு ரூ.688 குறைந்து ரூ.31,472-க்கு விற்கப்பட்டது. இந்த வாரத் தொடக்கத்தில் கடந்த திங்களன்று மட்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை, சவரன் ரூ.31,544-க்கு விற்பனையானது. நேற்று உயர்ந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று காலை சரிந்து ஆறுதல் அளித்துள்ளது. ஆனால், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 31,032-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11 உயர்ந்து ரூ. 3,879-ஆக வர்த்தகமாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.38.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Gold, shaving, sale
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...