சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அயர்லாந்தில் இருந்து திரும்பிய 21 வயது மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.