×

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் குடும்ப அட்டை வைத்திருப்போம் எங்கு வேண்டுமெனாலும் ரேசன் பொருட்களை வாங்கலாம் : உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது , சோதனை நடைமுறையில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை என்பதால் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். குடும்ப அட்டை வைத்திருப்போம் எங்கு வேண்டுமெனாலும் ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன்  திட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த திட்டம் முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம்  செயல்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம்.வேலைக்காக வெளியூர் சென்று பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

Tags : Kamaraj ,anywhere ,Tamil Nadu , One Country, One Ration Card, Thoothukudi, Tirunelveli, Thoothukudi, Food, Minister, Kamaraj, Law
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...