×

பாபநாசம் அருகே ஜமாத் தலைவர் காருக்கு தீ வைப்பு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பாபநாசம்: பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முன்னாள் ஜமாத் தலைவரின் காருக்கு தீவைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அடுத்த வடக்குமாங்குடி வஞ்சுவழி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அப்துல்காதர் (64). முன்னாள் ஜமாத் தலைவர். இவர் நேற்றுமுன்தினம் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். நேற்று அதிகாலை அங்கு வந்த மர்மநபர்கள், காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர். இதில் கார் தீப்பற்றி எரிந்தது.

இந்த வெளிச்சத்தில் கண்விழித்த அப்துல்காதர் வெளியே வந்து கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. அப்துல்காதர் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் சோதனையிட்டபோது 3 பேர் வந்து காரை எரித்தது தெரிந்தது. இதுகுறித்து பாபநாசம் போலீசில் அப்துல் காதர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Jamaat ,leader fires ,Babbanasam Papanasam , Papanasam
× RELATED தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை